அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் நிராகரிப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பரிபூரண மாக்கியே வைப்பான். (61:8). 

தொழுகையில் இன்பம்

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் மஹ்தி அவர்கள் கூறுகின்றார்கள்:

தொழுகை என்பது, சிறப்பான ஒரு பிரார்த்தனை ஆகும். ஆனால், மக்கள் இதனை ஒரு பாரமாகக் கருதுகின்றனர்.
எந்தத் தேவையும் இல்லாத இறைவனுக்கு, மனிதன் இறைவனை வணங்க வேண்டும், திக்ரு செய்ய வேண்டும் என்பது தேவையில்லாததுதான். ஆயினும் தொழுகை, திக்ரு முதலியவற்றில் உள்ள பயன்கள் மனிதனுக்கே கிடைக்கின்றன. இவற்றின் மூலம் மனிதன் தான்

இயேசுவும் பொந்தியு பிலாத்துவும்

 
இயேசுவை யூத சமயத் தலைவர்கள் கொல்லத் திட்டமிட்டிருந்த விவரத்தை சுவிசேகர் மத்தேயு இவ்வாறு எழுதியுள்ளார்: “....... சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் இயேசுவைக் கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாக ஆலோசனை பண்ணி (27:1)

ஆனால் தனது அடியாராகிய இயேசுவை சிலுவை மரணத்திலிருந்தும், கொடியவர்களின் கையிலிருந்தும் காப்பாற்றும் திட்டத்தினை திருக்குர்ஆன் கீழ்க்கண்டவாறு எடுத்துரைக்கிறது.

‘(ஈஸாவின் பகைவர்களாகிய) அவர்களும் திட்டம் தீட்டினர். அல்லாஹ்வும்

இக்திதார்

 
அல்லாஹ்வுடைய வல்லமைமிக்க அடையாளம் என்பதன் பொருள், அவனுடைய பொதுவான விதிகளுக்கும், சட்டத்திற்கும், மாறுபட்ட நிகழ்ச்சியாகும். இதற்க்கு இக்திதார் என்று பெயர். ‘இக்திதார்’ மூலமாக நிகழும் அடையாளம், விரோதிகளை அழிப்பதற்கு மட்டுமின்றி, இறைநேசர்களுக்கும், அவனுடைய நல்லடியார்களுக்கும் உதவிபுரிவதற்க்காகவும் காட்டப்படுகிறது. சில சமயம் ஒரே வேளையில் இரு வகையான அடையாளங்களை ஒன்றாக சேர்த்துக் காட்டுகின்றான்.

ஹஸ்ரத் மஸீஹ் மஊது (அலை) அவர்கள் கூறுகிறார்கள். ‘நான் ஸியால் கோட்டில் இருக்கும் போது ஒரு நாள் கடுமையான இடியும் மின்னலும்

காலத்தால் மாறாதது இஸ்லாம்!


முஸ்லிம் சட்டத்தை மாற்றவேண்டும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஒரே விதமான சட்டம் இருக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் அவ்வப்போது எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்த நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவனுடைய மதத்தைக் கடைபிடிக்க அதன் படி வழிபாடுகள் நிகழ்த்த, அதனை பிரச்சாரம் செய்ய இந்திய அரசியல் சாசனம் உரிமை வழங்கி இருக்கிறது.

இதற்க்கு மாற்றமாக ஒருவன் தன் மதம் கூறும் வழிமுறைகளை கடைபிடிக்கக் கூடாது, பொதுவானதையே கடைபிடிக்க வேண்டும் என்று கூறுவது அரசியல் சாசனம் அளித்துள்ள தனி மனித உரிமைகளை

லா நபிய்ய பஹ்தி ஹதீஸிற்கு இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கம்

 
லா நபிய்ய பஹ்தி என்ற ஹதீஸிற்கு இனி இறுதிநாள் வரை எந்த ஒரு நபியும் தோன்றமாட்டார்கள் என்பதுதான் இன்றைய இஸ்லாமிய அறிஞர்கள்(?) கொடுக்கும் விளக்கமாகும். ஆனால் இவர்களின் இந்த கூற்றுகளை கடந்த கால இஸ்லாமிய அறிஞர்கள் மறுக்கிறார்கள்.

ஷைஹுல் இமாம் இப்னு கத்தீபா (ஹிஜ்ரி 267)

ஹஸ்ரத் ஆயிஸா (ரலி) அவர்களின் கூற்று ‘லா நபிய்ய பஹ்தி’ என்ற நபி மொழிக்கு முரண்பட்டதல்ல; ஏனென்றால் தமக்குப் பிறகு தாம் கொண்டு வந்த ஷரியத்தை இரத்து செய்யக் கூடிய ஒரு நபியும் தோன்றமாட்டார்கள்.

யூதர்களின் கைக் கூலிகள் யார்!

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தபோது மேற்கத்திய சக்திகள் தங்களின் சுய நலனுக்காக முஸ்லிம் நாடுகளோடு பல ஒப்பந்தங்களை செய்து கொண்டன முஸ்லிம் நாடுகளுக்குப் பல பொய்யான வாக்குறுதிகளை அளித்து அந்நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரே சக்தியாக மாறவிடாது தடுத்திருந்தார்கள். இதனால் முஸ்லிம் நாடுகள் ஒன்றை ஒன்று போட்டி மனப்பான்மையோடு எதிர்த்துக் கொண்டிருந்ததன்.

அதே சமயத்தில் இந்த மேற்கத்திய வல்லரசுகள் யூதர்களோடு கலந்துரையாடி அவர்களோடு பல ஒப்பந்தங்களையும் செய்தனர். அரபு நாடுகளோடும்

வீடுகளில் ஒழுக்கத்தையும், அமைதியையும் ஏற்படுத்துங்கள்.

.
பொய் எல்லாத் தீமைகளுக்கும் குழப்பங்களுக்கும் அச்சாணியாகவும் எல்லாப் பாவச் செயல்களின் வித்தாகவும் இருக்கின்றது.


நன்மையில் துவக்கப்படுவது நன்மையில் முடிவதைப் போல் தீயதில் துவக்கப்படுவது தீமையில்தான் முடிவடையும்.

இன்னாமஅல் அஹ்மாலு பின் நியாத் – எண்ணத்தின் அடிப்படையிலேயே செயல்கள் அமையப்பெறும் என்ற நபி மொழியின் கருத்தும் இதுவேயாகும்.

உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் நோக்கமும் துவக்கமும் எப்படி இருக்குமோ அதற்கேற்றவாறே அதன் முடிவும் அமையும்.


ஆலிம்களைக் கவர்ந்த காதியானி (அபூதாரிக்)


மௌலான உபைதுல்லாஹ் ஸிந்தி அவர்கள் உலகப் புகழ்பெற்ற இந்திய அறிஞர். இவர் அரபு நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்றிருக்கிறார்கள். அந்நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்கள் இவரை ஒரு பேரறிஞராக ஏற்று கௌரவித்துள்ளன. இவர் டில்லியிலுள்ள ஜாமியா மில்லியா நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். இவரைப் பற்றி இவருடைய மாணவர் மௌலான முஹம்மது ஸர்வார் என்பவர் உருது மொழியில் இஹ்பாதாத்தோ மல்பூஸாத் ஹஸ்ரத் மௌலான உபைதுல்லாஹ் ஸிந்தி என்ற நூலை எழுதியுள்ளார். அந்நூலில் காணப்படும் குறிப்பு

ஈசா நபி (அலை) அவர்களின் மரணம் - P.J யின் அறியாமை

திருக்குர்ஆன் விளக்கம் - ஈஸா (அலை) வருகை என்னும் தலைப்பில் பி. ஜைனுலாப்தீன், (ஒற்றுமை இதழில் 45 ஆம் பக்கத்தில் எழுதப்பட்ட திருக்குரானின் தவறான விளக்கத்திற்கு இங்கு விளக்கம் தரப்படுகிறது.

மௌலவி பி.ஜைனுலாப்தீன்: "மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயையும் இரண்டு கடவுளர்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நீர்தான் மக்களுக்கு கூறினீரா? என்று அல்லாஹ் கூறும்போது, நீ தூயவன். எனக்கு உரிமை இல்லாததை நான் கூறுவது எனக்குத் தகாது. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக நீ அறிவாய். என் மனதில் உள்ளதை நீ அறிவாய். உன் மனதில் உள்ளதை நான் அறியமாட்டேன் நீயே மறைவானவற்றை எல்லாம் நன்கு அறிபவன்! எனது இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் என நீ எனக்கு

ஆதம் நபி வாழ்ந்தது இவ்வுலக தோட்டமா? மறுமை சொர்க்கமா?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 12 இல் சொர்க்கம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

ஆதம் நபி மறுமையில் நல்லோர்க்கு இறைவன் வழங்கவுள்ள சொர்க்கச் சோலையில் தங்க வைக்கப்பட்டு இறைக் கட்டளையை மீறியதால் வெளியேற்றப்பட்டார் என்று பலர் கூறுகின்றன.

நம் விளக்கம்:

திருக்குர்ஆன் 2:36 இல் ஆதமே! நீரும் உம் மனைவியும் இத்தோட்டத்தில் குடியிருங்கள்.... என்று கூறினோம் என்று வருகிறது. இதே கருத்து 7:20 வசனத்திலும் வருகிறது. பூமியிலுள்ள எல்லா குடியிருக்கும் இடங்களும் அதாவது வாழும் இடங்களும்...... இதில் வாழும் இடங்கள் என்று எந்த அடைமொழியும் இன்றியே திருக்குர்ஆனில் வருகிறது. ஆனால் சொர்க்கத்தில் உள்ள குடியிருக்கும் இடத்தை – வாழும் இடத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது, தூய, பரிசுத்தமான வாழுமிடம் என்று தூய என்று அடைமொழியுடன் சேர்த்துக் கூறுகிறான். திருக்குர்ஆனில் 9:72; 61:13 ஆகிய வசனங்களில்,